கதையின் கதை
கதை எழுதுவதின் பின்னே ஒரு கதை இருந்தது. இணையத்தில் தெரிந்தவர் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். எழுதினேன். அனுப்பினேன். சற்றுக் காலத்தின் பின்னர் எழுதியதில் தாடச்சுப் பிழைகள் இருந்தன. என் கதை வெளிவரவில்லை. அதே நபர் எழுதிய கதையில் பல ஒற்றுமைகள் இருந்தன. எனக்கு குழப்பமாக இருந்தது. என் கதையில் சில மாற்றங்கள் செய்து திண்ணைக்கு அனுப்பினேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10708027&format=html
நடந்ததிற்கு சாட்சி இல்லை. ஒரு கதை வாசித்ததின் விளைவாக புதுக்கதை எழுதும் போது சில நேரங்களில் வாசித்த கதையின் சாயல் வரலாம். எதுவாயினும் என்கதை பிந்தி வந்ததின் காரணமாக அவ்விளைவுகள் என்கதையில் இருப்பதாகவே யாவரும் என்னக் கூடும்.
அதிர்வாகத் தொடங்கி ஆழ்ந்த கற்பனையில் வளர்ந்து பின் சற்று செப்பனிடப்பட்டது என் கதை. ஒரு கதை அல்லது கவிதை எழுதுவதில் சாராம்சத்திற்கு பின் வருவன காரணமாக இருக்கலாம்.
1. சொந்த அனுபவம்
2. கனவு
3. பார்த்த படம்
4. வாசித்த கதை அல்லது கவிதை
5. அலங்கரிக்கப்பட்ட கற்பனை
என்கதைக்கு அன்னியன் படமும் ஐந்தாவது காரணமும் தான்
Monday, November 23, 2009
Subscribe to:
Comments (Atom)