Monday, October 25, 2004

நல்லூர் கந்தன்

Nallur Kumaranhttp://www.nalluran.com/
நல்லூர் கந்தன்

ஆவணி மாதம் பிறந்ததினம் - மனம் . .
ஆடிக் களிக்கச் சிறந்ததினம்
சேவற் கொடியும் பறக்கும்தினம் - நல்லூர் . .
சீரால் கவலை மறந்ததினம்


சூழலில் சுத்தமும் கூடுமிடம் - நல்லூர் . .
சுற்றமும் கொண்டாட்டம் தேடுமிடம்
தோழமை எங்குமே தோன்றுமிடம் - தெய்வ . .
சொர்க்கமும் காணவே நாடுமிடம்

கோல எழிலில் தலமாங்கே - மக்கள் . .
கோடித் தொகையாய் குலமாங்கே
வேலன் விழாவில் அருளதனால் - வினை . .
வெற்றி கிடைக்கும் பலமாங்கே

நூற டியகல வீதியங்கு - தினம் . .
நொந்த தரமெனின் நாதியங்கு
ஆறைந்து நாட்கள் முருகவிழா - அளவில் . .
அன்புடன் மக்கள் பாதியங்கு

பத்தாம் தினமாம் பவனியிலே - மஞ்சம் . .
பார்க்க முடியும் புவனியிலே
முத்துக் குமரன் வருகையிலே - மக்கள் . .
முத்தி பெறுவார் அவனியிலே

நூறடிச் சப்பறம் கட்டிடுவார் - பின் . .
நுனியும் எழில்தர ஒட்டிடுவார்
பேறெனப் பார்க்கத் துடிக்கும் சனம் - அட . .
பின்னேரம் ஆயினும் எட்டிடுவார்

தேரில் அழகிய ஆறுமுகம்- வீதி . .
சேர்ந்துநல் ஆசிகள் கூறு முகம்
ஊரிலே யாவரும் கூடி வணங்கிட . .
ஒப்பனைப் பச்சையில் ஏறுமுகம்.

அண்ணனும் ஈற்றிலே வந்திடுவான் - ஐவராய் . .
ஆவணித் தீர்த்தமும் தந்திடுவான்
பெண்கள் இருவரின் கைப்பிடியில் -அந்தப் . .
பிள்ளை அருள்தர முந்திடுவான்.

No comments: