கீழே தருவது Toronto கவியரங்கில் நான் படித்த கவிதை :
தலைவர் : கவிமாமணி இலந்தை ராமசாமி தலைப்பு : அவரவர் விருப்பம் போல்
அலை தாண்டி அம்மன் ======================
கடல்கடந்து வீற்றுள்ள நயினைத் தீவு
கருணைமிகு கடவுளையும் காண வேண்டின்
படகிடம் செல்லுகின்ற பயணம் உண்டு
பழைய வள்ளம் விசைப்படகாய் சுமந்து செல்லும்
கடல்நடுவே பயணிக்கும் இன்ப வேளை
காட்சிதரும் பல இடங்கள் அழகில் உச்சம்
வடதிசையில் பயணித்து முடிக்கும் நேரம்
வரவேற்கும் கோபுரமோ வதனக் காட்சி
பெயரினிலே நயினைபுற அம்மன் என்று
பெரிதாகப் புகழ்பெற்ற சிறப்புக் கோயில்
வியக்கவைக்கும் மிடுக்கான தீவு ஒன்றில்
விளங்குகின்ற வெளிப்புறத்தில் அகல வீதி
உயர்ந்தமர நிழல்கொண்ட பாதை ஆங்கே
ஒப்பற்ற அம்மன்தேர் ஊரார் சீரில்
அயர்ந்தவனும் எழுப்பவைக்கும் மணியின் ஓசை
ஆலயத்தால் அழைக்கப்படும் நல்ல நாதம்
முறைப்படியாய் கட்டியுள்ள பழைய கோயில்
மூலத்தில் உறைகின்றாள் தூய அம்மன்
மறைத்துநிற்காக் கொடிமரமும் நடுவே அங்கு
வதனத்தில் மிஞ்சிநிற்கும் உயரக் கூரை
நிறையெழிலில் உட்புறத்தே வீதி நான்கு
நெஞ்சத்தைக் கவர்ந்திருக்கும் தெய்வச் சிற்பம்
இறையருளைக் கூட்டிவிடும் எழிலாய்ப் பூசை
இதைப்புரியும் விதமுரைக்கச் சொற்கள் இல்லை
வரலாற்றில் வானுயர்ந்த புகழைப் பெற்று
வையகத்தில் அருள்தருவாள் நயினை அம்மன்
சிரம்தாழ்த்தி வணங்கவரும் பக்தர்க் கெல்லாம்
சிறப்பாக அன்னதானம் என்றும் உண்டு
அரிதாக ஆண்டவனை நெருங்குவோர்க்கும்
அருமைமிகு சூழலிலே மாற்றம் கிட்டும்
தரணியிலே தனித்துவமாய் நிற்கும் அம்மன்
தந்திடுவாள் சந்தோச வாழ்வு என்றும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment